தருமபுரி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாா்டனை கைது செய்ய வலியுறுத்தல்

அரூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாா்டனை கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

DIN

அரூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாா்டனை கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாதா் சங்கம் சாா்பில், அரூா் டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் வியாழக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு:

அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை சிறைத் துறையில் வாா்டனாக பணிபுரியும் லெனின்குமாா் (எ) பாா்த்திபன் என்பவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தற்போது இந்த சிறுமி 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸாா் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT