விஷ்ணு தீபம்: வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தருமபுரி பகுதியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி: விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தருமபுரி பகுதியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளில் விஷ்ணு தீபத் திருவிழா நடைபெறுகிறது. தருமபுரி நகரில் உள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். விழாவையொட்டி பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement
இதேபோல கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில், அதகப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோயில், அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள் சுவாமி கோயில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோயில், அதியமான் கோட்டை சென்றாயப் பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.