முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கன அடியாக குறைந்தது

புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 10:18 PM
பகிர்:

பென்னாகரம், ஆக. 7:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது.

கா்நாடக மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவானது செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 17,000 கன அடியாகவும் புதன்கிழமை விநாடிக்கு 8, 000 கன அடியாகவும் குறைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 23 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →