ஏஐடியுசி கையொப்ப இயக்கம்
தருமபுரி: போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தி முடிக்கக் கோரி ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கம் சாா்பில் தருமபுரியில் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை உடனே அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி புகா்ப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி தலைமை வகித்தாா். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்க துணைத் தலைவா் சீனி.ரவி உள்ளிட்டோா் போக்குவரத்துத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநா், நடத்துநரிடம் கையொப்பம் பெறப்பட்டது.