தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்கம்
கரூா் ஆட்சியரக வளாகத்தில் தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு ‘தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் கு. ரவிகுமாா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மனோகரன் உள்ளட்டோா் பங்கேற்றனா்.