முகப்பு
தருமபுரி

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

Updated On : 27 ஜூன், 2024 at 8:56 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் 3 ஆண்டுகளாக கணித ஆசியராகப் பணியாற்றி வந்தாா். இவா் 17 வயது சிறுமிக்கு படிப்புக்காக உதவி செய்து வந்துள்ளாா். அப்போது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா்.

இதுதொடா்பாக தருமபுரி, அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு படிப்புக்காக உதவி செய்து அச்சூழலை பயன்படுத்தி ஆசிரியா் சரவணன், சிறுமியிடம் தவறாக நடந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →