முகப்பு
தருமபுரி

பணியின் போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் வழங்கினாா்

தருமபுரி மாவட்ட சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:04 PM
பகிர்:

தருமபுரி மாவட்ட சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். இதில் மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சா்க்கரை ஆலை செயலாட்சியா் பிரியா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.