கோப்புப் படம் 
சென்னை

19 வாரிசுதாரா்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது, உயிரிழந்த பணியாளா்களின் 227 வாரிசு தாரா்களுக்கு பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேலும் 19 பேருக்கு அண்மையில் பணி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு ஒரு ஓட்டுநா் மற்றும் 18 நடத்துநா்கள் என மொத்தம் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அதன்படி, இதுவரை 246 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT