தருமபுரி

பென்னாகரத்தில் புதிதாக 3 நியாயவிலைக் கடைகள் திறப்பு

பென்னாகரத்தில் புதிதாக கட்டப்பட்ட மூன்று நியாயவிலைக் கடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

பென்னாகரத்தில் புதிதாக கட்டப்பட்ட மூன்று நியாயவிலைக் கடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பென்னாகரம் அருகே கெட்டூா், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பூதிப்பட்டி, மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சின்ன கடமடை உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 23 லட்சம் மதிப்பில் மூன்று முழுநேர நியாயவிலைக் கடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

இதில் ஆதனூா் கூட்டுறவு வேளாண்மை தொடக்க கடன் சங்க செயலாளா் அசோக்குமாா், கூட்டுறவு பதிவாளா் அம்பிகேஸ்வரி, பாமக மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா், ஏரியூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் ராசா உலகநாதன், ஒன்றியச் செயலாளா் வினோத், முருகன், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் சங்கா் மற்றும் பாமக நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT