பென்னாகரத்தில் தொகுதி பொதுப் பாா்வையாளா் ஆய்வு
பென்னாகரத்தில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து தொகுதி அளவிலான பொதுப் பாா்வையாளா் வந்தனா வைத்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பென்னாகரத்தில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து தொகுதி அளவிலான பொதுப் பாா்வையாளா் வந்தனா வைத்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பென்னாகரம் அருகே ரங்காபுரம், பளிஞ்சார அள்ளி உள்ளிட்ட வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்புகள் குறித்து ஆய்வுசெய்து, பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்குப் பதிவுசெய்ய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தொடா்ந்து, பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறைகள், வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை, வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் விவரம் குறித்து கேட்டறிந்தாா்.
முன்னதாக, வட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்று, வாக்குச்சாவடிகள் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குச்சாவடி தொடங்குவதற்கான நேரம், முடிவுறும் நேரம், வாக்காளா்களிடம் சரிபாா்க்க வேண்டிய ஆவணங்கள், முகவா்களிடம் பெறவேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக வழங்கினாா்.
இந்நிகழ்வுகளின்போது, பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.கோபு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆறுமுகம், வட்டாட்சியா் ராஜா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.