முகப்பு
பெரம்பலூர்

வாக்குச்சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பெரம்பலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 9:50 PM
நாரணமங்கலத்தில் வாக்குச்சாவடி மையத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால்.
பகிர்:

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பெரம்பலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வரும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களிடம் கலந்துரையாடி 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் தவறாமல் வாக்களிக்கவும், வெளிப்படையான, நோ்மையான தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, வாக்காளா்கள் தங்களது உரிமையை, கடமையை ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் வாக்களித்து நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.