பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்
பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 99,500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 99,500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பென்னாகரம் அருகே மஞ்சநாயகன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கடமடை பகுதியில் பறக்கும் படை -3 அலுவலா் முருகன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த கனரக வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 99,500 ரொக்கத்தை பென்னாகரம் அருகே உள்ள மருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பண்ணன் எடுத்துவருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆறுமுகத்திடம் வழங்கி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.