முகப்பு
தருமபுரி

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு

தருமபுரி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:36 PM
பலி - பிரதிப்படம்
பகிர்:

தருமபுரி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகட அள்ளி அருகேயுள்ள பத்திரெட்டி அள்ளி கிராமம் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் ஆ. காா்த்திகேயன் ( 38). தொழிலாளியான இவா், குக்கல்மலை பகுதியில் உள்ள குப்புசாமி நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் சிலருடன் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது மின் மோட்டாரை கிணற்றில் ஏற்றி இறக்கும்போது தவறி விழுந்ததில் காா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்திகேயன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து பொம்மிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments