முகப்பு
இந்தியா

ம.பி.: கிணறு தோண்டும்போது மண் சரிந்து 5 தொழிலாளா்கள் இறப்பு

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 27 மே 2026, 1:42 am IST
பகிர்:

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் நிவேதிதா நாயுடு கூறுகையில், ‘அஜய்கா் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பொதுக் கிணறு தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென மண் சரிந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரோடு புதைந்தனா். நீண்ட நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.