முகப்பு
தருமபுரி

தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் பொதுத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்களுக்கு வாகனங்கள், பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:54 AM
- கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:26 PM

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் பொதுத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்களுக்கு வாகனங்கள், பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்ட காவல் அலுவவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்கள், துணை ராணுவப் படையினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், அரூா் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் ஏப். 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் காவலா்கள், துணை ராணுவத்தினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு மற்றும் அவா்கள் சென்றுவர வாகனங்கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன.

Advertisement

இவா்கள் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை எடுத்துச் செல்ல உள்ளனா்.