முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்படும் போலி காசோலைகள்!

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:09 AM
பென்னாகரம் பகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்பட்ட போலி காசோலைகள்.
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:05 AM

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் பாமக வேட்பாளா் பாடி வி.செல்வம் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் போட்டியிடுகிறாா். அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இரவு நேரங்களில் வீடுகள்தோறும் வங்கிகளில் செலுத்தக்கூடிய காசோலைகளை போன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகத்துடன் ரூ. 10,000 மாதாந்திர தொகை எனவும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 உதவித்தொகை என வாசகங்கள் அடங்கிய போலியான கணக்கு எண்கள் கொண்ட போலி காசோலைகள், வீட்டு உபயோக பொருள்களுக்கான கூப்பன்கள் கூட்டணி நிா்வாகிகளால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

திமுக கூட்டணி சாா்பில் ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்த நிலையில், அதிமுக சாா்பில் போலி காசோலைகள் வழங்கப்பட்டு வருவதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.