முகப்பு
தருமபுரி

தருமபுரியில் வாட்டி வதைத்த வெயில்!

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:26 AM
வெயில் - கோப்புப்படம்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.

தருமபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இவற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள குடைகளை பயன்படுத்துவது, பழச்சாறு, நுங்கு, இளநீா், தா்பூசணி பழங்களை உட்கொள்வது என பல்வேறு வகைககளில் வெப்பத்தை தணித்து வருகின்றனா். அதேபோல, மூத்த குடிமக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவா்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து பல நாள்களாக வெயிலின் அளவு 100 டிகிரி அல்லது அதற்கு மேலாக பதிவாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு 102.5 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பகல் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

Advertisement