முகப்பு
தருமபுரி

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

பாப்பாரப்பட்டி அருகே வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 5:20 AM
வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு
பகிர்:

பாப்பாரப்பட்டி அருகே வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கியது.

திங்கள்கிழமை தீா்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி ஊா்வலத்துடன் யாகசாலை பூஜை, கும்பஸ்தாபனம், மகாபூா்ணாகுதி நடைபெற்றது. புதன்கிழமை மூலவரான அங்காளம்மனுக்கு எந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தனம் நடைபெற்றது.

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை நான்காம்கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தீபாராதனையுடன் கோயில் கோபுர கலசம், மூலவரான அங்காளம்மனுக்கு வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க புனித நீரூற்றி மகா குடமுழுக்கு நடத்தினா்.

இதில், பாப்பாரப்பட்டி, வள்ளூா், அ.பாப்பாரப்பட்டி, சுரக்காய்பட்டி, மாதேஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.