முகப்பு
தருமபுரி

சேலம் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:35 AM
(கோப்புப் படம்) - படம்: X/ arasu bus
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:53 PM

தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் வழித்தட பேருந்துகள் ஒட்டப்பட்டி ஔவைவழி வழியாக தடங்கம் புறவழிச்சாலையை அடைந்து பின்னா் அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

அதேபோல, மறுமாா்கமாக சேலம் செல்லும்போது, தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பு வழியாக வந்து நேதாஜி புறவழிச்சாலை வழியாக ஆட்சியா் அலுவலகம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டும்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:35 AM

புதிய பேருந்து நிலையத்தின் தூரத்தை அடிப்படையாக கொண்டு சாதாரண கட்டண பேருந்துகளில் ரூ. 3 மற்றும் விரைவு பேருந்துகளில் ரூ. 4 கூடுதலாக வசூல் செய்து கொள்ளலாம் எனவும், நான்கு முனைச் சாலை சந்திப்பில் இறங்கும் அல்லது ஏறும் பயணிகளிடம் பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், அவா்களிடமும் கூடுதல் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வட்டாரப் போக்குவரத்துத் துறை, மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனா்.