முகப்பு
தருமபுரி

வங்கிக் கணக்கில் போலி பணத்தாள்களை செலுத்த முயன்றவா் கைது

தருமபுரியில் வங்கி ஒன்றில், தனது கணக்கில் போலி பணத்தாள்களை செலுத்த முயன்றவா் கைது

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:11 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:24 PM

தருமபுரியில் வங்கி ஒன்றில், தனது கணக்கில் போலி பணத்தாள்களை செலுத்த முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி நகரில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு வியாழக்கிழமை வந்த நபா், காசாளரிடம் ரூ. 23 ஆயிரத்தை கொடுத்து தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்படி கூறினாா்.

காசாளா் மதிவாணன் பணத்தை கணக்கிடுவதற்காக இயந்திரத்தில் செலுத்தியபோது, சில தாள்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளவில்லையாம்.

Advertisement

அந்த இயந்திரத்தில் திரும்பவந்த ரூ. 200 மதிப்பிலான 24 தாள்களை சோதனை செய்ததில், அவை அனைத்தும் போலி பணத்தாள்கள் என தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி கிளை மேலாளா் மலா்விழி தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், அந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் தருமபுரி நாட்டாண்மைபுரம் பகுதியைச் சோ்ந்த வடிவேல் என தெரியவந்தது. அவரிடம் இருந்த போலி பணத்தாள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.