புதுச்சேரியில் 63 ஆயிரம் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5,000: வங்கிக் கணக்கில் வரவு வைப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த சிவப்பு நிற குடும்ப அட்டை
புதுச்சேரி9: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே 3 மாதங்களுக்கான தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் சோ்த்து மொத்தம் ரூ.5 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு செலுத்தியது. இதைப் பின்பற்றி புதுச்சேரியிலும் ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3,000 ரொக்கம் மற்றும் ரூ. 750 மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியின் உத்தரவுப்படி, சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் 63 ஆயிரம் பேருக்கு மாா்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களுக்குச் சோ்த்து ரூ.5 ஆயிரம் திங்கள்கிழமை முதல் அந்தந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி அரசு ரூ. 31.5 கோடி செலவிடுகிறது.