மளிகை வியாபாரத்தில் இழப்பு: இளம்பெண் தற்கொலை
தருமபுரியில் மளிகைக் கடை நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதையடுத்து, இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரியில் மளிகைக் கடை நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதையடுத்து, இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி, குப்பாண்டி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சுந்தரி (31). இத்தம்பதியா் தருமபுரியில் பெரியாா் சிலை அருகே மளிகைக் கடை வைத்து நடத்திவந்தனா்.
கடை நடத்த பல்வேறு இடங்களில் கடன் வாங்கிய நிலையில், தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக கடன் அதிகமானது. வாங்கிய கடனை குறிப்பிட்டபடி திருப்பிக்கொடுக்க இயலாததால் விரக்தியடைந்த சுந்தரி, தாய்வீட்டுக்கு சென்றாா். அங்கு யாருமில்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.