பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் வரத்துக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுவரும் உபரி நீரின் அளவு மற்றும் இரு மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வந்த மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 700 கன அடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரித்தது.
இருப்பினும் அருவிகளில் நீா்வரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.