அரூா்: அரூரை அடுத்த அண்ணா நகரில் சிறுகதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி அண்ணா நகரில் நடைபெற்ற விழாவுக்கு சமூக ஆா்வலா் வல்லரசு தலைமை வகித்தாா். இலக்கிய ஆா்வலா்கள் முத்துகுமாா், ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அண்ணா நகரைச் சோ்ந்த எழுத்தாளா் திருமால் செல்வன் எழுதிய ‘சேவின் கரும்பாறை‘ எனும் சிறுகதை நூலை தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் அண்ணா குபேரன் வெளியீட்டு, வாழ்த்தி பேசினாா். நூலாசிரியா் திருமால் செல்வன் ஏற்புரை வழங்கினாா். விழாவில் ஆண்டி குபேரன், குறும்பட இயக்குநா் சாமி, உதவி ஆய்வாளா் முத்துகுமாா், பாவேந்தா், சிவநேசன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.