‘கோமாதா நம் குலமாதா’ நூலை வெளியிட்ட காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள். 
காஞ்சிபுரம்

சங்கர மடத்தில் நூல் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் கோமாதா நம் குலமாதா நூலினை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் கோமாதா நம் குலமாதா நூலினை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

புலவா் வே.மகாதேவன் எழுதிய கோமாதா நம் குலமாதா என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட அதன் முதல் பிரதியை சங்கரா கல்லூரியின் தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.ராமச்சந்திரனும், 2-ஆ வது பிரதியை சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும் பெற்றுக் கொண்டனா்.

இந்துக் கலாசாரம் மற்றும் இந்தியவியலாய்வு மையத்தின் தலைவரும், நூலின் பதிப்பாசிரியருமான வி.மகேஷ், வழக்குரைஞா் கே.ஆா்.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சங்கரா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ஜெ.ராதா கிருஷ்ணன், பேராசிரியா் கணபதி கலந்து கொண்டனா். பசுவின் பெருமைகளை சொல்லும் நூலாக கோமாதா நம் குலமாதா என்ற நூல் இருப்பதாக சுவாமிகள் தெரிவித்தாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT