ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், கடந்த சில நாள்களாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை நீா்வரத்து திடீரென 1,200 கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.