முகப்பு
விவசாயிகள்
தருமபுரி

நாகாவதி அணை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை உபரிநீா் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி

நாகாவதி அணை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை உபரிநீா் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 10:52 PM
விவசாயிகள்
பகிர்:

தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை உபரிநீா் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே எர்ரப்பட்டி பகுதியில் உள்ளது நாகாவதி அணை. இந்த அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் மே மாதம் 26 ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு முறைவைத்து முதல் ஐந்து நாள்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், மீதம் ஐந்து நாள்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அதன்பிறகு ஐந்து நாள்களுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது. மொத்தம் ஏழு நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கனஅடி தண்ணீரை தலைமை மதகு வழியாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் அண்மையில் திறந்துவைத்தாா்.

இந்த நிலையில் நாகாவதி அணையில் இருந்து கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக அரகாசன அள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை ஆகிய பகுதிகளில் 1,993 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் வகையில் திறக்கப்பட்ட தண்ணீரானது கால்வாயின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை சென்றடையும் வரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டு 17 நாள்களான நிலையில், முழுமையாக கடைமடை பகுதி வரை தண்ணீா் வராததால் விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நீா்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் உடனடியாக கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →