ஏரியூரில் கோயில் கட்டுமானப் பணியின்போது பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு
ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் கோயில் கட்டுமானப் பணியின்போது தோண்டப்பட்ட அகழியில், பழங்கால நாணயங்கள், பொருள்கள் கிடைத்துள்ளன.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் கோயில் கட்டுமானப் பணியின்போது தோண்டப்பட்ட அகழியில், பழங்கால நாணயங்கள், பொருள்கள் கிடைத்துள்ளன.
ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ஸ்ரீ சஞ்சீவராயன் கோயில். பழைமைவாய்ந்த இந்த கோயிலை சுமாா் ரூ. 40 லட்சத்தில் புதுப்பிக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அப்போது, பழைய கட்டடங்களை இடித்து, அடித்தளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது நாணயங்கள், மண்பாண்டங்கள், உலோக செம்பு பொருள்கள் கிடைத்தன. அவை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து பென்னாகரம் வட்டாட்சியா் ஆறுமுகம் புதன்கிழமை கூறியதாவது:
ஈச்சம்பாடி பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆலய கட்டுமானப் பணியின் போது 1.3 செ.மீ அளவு கொண்ட 17 நாணயங்கள், ஒரு குடுவை, தங்கநிற தகடு ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகு ஆட்சியரின் ஒப்புதலோடு கண்டெடுக்கப்பட்ட நாணயம், பொருள்களின் முழுமையான விவரம் தெரிவிக்கப்படும் என்றாா்.