முகப்பு
தருமபுரி

மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்க உலமாக்களுக்கு அழைப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 12:55 AM
கோப்புப் படம்
பகிர்:

மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்கி பயன்பெற தருமபுரி மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 18 வயதுமுதல் 60 வயதுவரை உள்ள பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கு அரசு மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இத்திட்டத்தின்கீழ், இருசக்கர வாகனத்துக்கான மானியத் தொகை ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயா்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தகுதியுடையோா் இருசக்கர வாகனத்துக்கான மானியம்பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல்பெற்று இருசக்கர வாகனம் வாங்கலாம்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயன்பெறலாம்.