ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழன்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழன்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவருவதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது. பின்னா் மாலை 1,000 கனஅடியாக குறைந்தது.