ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் புதன்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் புதன்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தொப்பூா்- காருவள்ளி ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் பாதையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக தருமபுரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், அவரது சடலத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இறந்தவரின் விவரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement