அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தடிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் துரை மகன் தமிழரசன் (27). சூளகிரி பகுதியில் இயங்கிவரும் தனியாா் கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், தருமபுரி மாவட்டம், பூவத்தி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலை ஊா் திரும்பினாா்.
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி -தேன்கனிக்கோட்டை சாலையில், சின்னாா் அணை, ஸ்ரீ ஆஞ்சனேயா் கோயில் பகுதியில் வந்தபோது, அவ்வழியே சென்ற வாகனம் அவா்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அந்த வாகனம் குறித்து அடையாளம் தெரியவில்லை.
Advertisement
Advertisement
இதில் படுகாயமடைந்த தமிழரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை துரை அளித்த புகாரின் பேரில், பஞ்சப்பள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். தமிழரசனுக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், 10 மாதத்தில் ஆண்குழந்தையும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.