மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி ஒசூரில் தொடங்கியுள்ளது.
பாரத பிரதமரின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒசூர் 35-ஆவது வார்டில் ஏழை மக்களின் விபரங்களை சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கான விழா பெரியார் நகர் முருகன் கோயில் அருகே நடைபெற்றது.
முன்னாள் கவுன்சிலரும், பாஜக மாநில இளைஞர் அணி செயலாளருமான நாகராஜ் தலைமை தாங்கினார்.