முகப்பு
கிருஷ்ணகிரி

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு அந்தப் பிரிவின் மாவட்டத் தலைவர் ஆறுமுக சுப்பிரமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிப்பது, ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் வரும் தேர்தலில் ஒருங்கிணைந்து வெற்றிக்குச் செயல்படுவது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வித் உதவித்தொகையை குறைத்த மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →