இந்துக் கோயில்களில் சுவாமி தரிசனக் கட்டணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் வட்டத் தலைவர் யுகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மஞ்சுநாத், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோயில்களில் வசூலிக்கப்படும் அர்ச்சனை கட்டணம், விஐபி கட்டணம், குளியல் கட்டணம், சிறப்பு ஒரு கால பூஜை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். கேரள மாநிலம்போல தமிழகத்திலும் கோயில்களில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என முழக்கங்கள் எழுப்பினர்.