கிருஷ்ணகிரி

உலக அமைதி வேண்டி நற்கருணை ஆராதனை பவனி

தினமணி

உலக அமைதி வேண்டி கிருஷ்ணகிரியில் நற்கருணை ஆராதனை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கிருஷ்ணகிரி தூயபாத்திமா ஆலயப் பங்கு மக்கள் உலக அமைதியும், சமாதானமும் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி ஆலயப் பங்குத் தந்தை சூசை தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி சாந்தி நகரில் உள்ள மாதா கன்னியர் சபை மடத்தில் நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நற்கருணை ஆண்டவர் பவனி நடைபெற்றது. புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகம் வரையில் நடைபெற்ற இந்தப் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஆலயப் பங்குத் தந்தை சூசை தலைமையில் உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை நிறைவேற்றப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT