கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி ஐ.இ.எல்.சி. போலியோ காப்பகத்தில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், புதூர் மாரியம்மன் கோயிலில் மாவட்ட சேவா சங்கம் சார்பில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அந்தக் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன், பொதுச் செயலர் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜேசு துரைராஜ், நகரத் தலைவர் ரகமத்துல்லா வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.