கிருஷ்ணகிரி

கல்லூரி மாணவருக்கு கத்திக் குத்து

DIN

கல்லூரி மாணவரைக் கத்தியால் குத்தியதாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேல்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்  சீராம் (60).  இவரது மகன்கள்  நாகேந்திரன்,  ரஞ்சித் யாதவ்(37) . அதே பகுதியைச் சேர்ந்தவர் வாசு. வாசுவுக்கும், ரஞ்சித் யாதவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வாசுவுக்கு ஆதரவாக சிட்டிபாபு மற்றும் பெங்களூரு கல்லூரியில் படித்து வரும் சாகுல் சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில்   சாகுல் சூர்யாவுக்கு  கத்திக் குத்து விழுந்தது.  இதில்  படுகாயம் அடைந்த அவர் தேன்கனிக்கோட்டை   அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர்  தீவிர சிகிச்சைக்காக  பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வாசு கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்யாதவ்,  சீராம், நாகேந்திரன் ஆகிய 3 பேர் மீது தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT