ஏப்.11-இல் முழு அடைப்பு: பாமக ஆலோசனை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, ஏப்.11 இல் கடை அடைப்பு, வேலை நிறுத்தம் நடத்தப்படுவது குறித்த
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, ஏப்.11 இல் கடை அடைப்பு, வேலை நிறுத்தம் நடத்தப்படுவது குறித்த பாமக சார்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் கொட்டகுளம் ஆறுமுகம் தலைமை வகித்தார்.நகர தலைவர் மணிவண்ணன்,மாவட்ட துணைத் தலைவர் சின்னதம்பி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜா,ஒன்றியச் செயலாளர்கள் அருண், வெள்ளிஅரசு, ஜனார்தனன், சித்தார்த் ,தொகுதி அமைப்புச் செயலாளர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.