முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நிறைவு விழா

கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கிய 26-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:37 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கிய 26-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூலை 10-ஆம் தேதி இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இதில் அரசுத் துறை அரங்குகள், தனியார் துறை அரங்குகள், அங்காடிகள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன. 
தினமணியின் தனித் திறன் விளையாட்டு போட்டிகளுடன் அரங்கு, தோட்டக் கலைத் துறையின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாங்கனிகள், மலங்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள், நறுமணங்களால் ஆன தாஜ்மஹால், காவல் துறையினரால் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.  கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சியும் நடைபெற்றது. பள்ளி கல்வித் துறையின் சார்பில் பல்வேறு பள்ளிகளின் சார்பில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள். கலைஞர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கண்காட்சியின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறந்த விவசாயிகள், அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
அதன்படி முதல் பரிசு தோட்டக்கலைத் துறைக்கும், இரண்டாம் பரிசு காவல் துறைக்கும், மூன்றாம் பரிசாக வேளாண் துறைக்கும் வழங்கப்பட்டன. சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.