வேலூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வேலூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக நேற்று இரவு வேலூர் வந்திருந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று காலை அங்கிருந்த கார் மூலமாக புறப்பட்டு கே.வி. குப்பம் தனி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் ராஜலட்சுமியை ஆதரித்து கே.வி. குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
Advertisement
Advertisement
கே வி குப்பம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு வீட்டுக்குள் சென்று அமர்ந்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, அங்கே பிரசாரம் மேற்கொள்ளும்போது அரசுப் பேருந்தில் ஏறி மகளிரிடம் பேசினார் முதல்வர். கே வி குப்பத்தில் முதலமைச்சர் நடை பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நிலையத்தில் இருந்த லத்தேரி செல்லும் மகளிர் இலவச அரசு பேருந்தில் ஏறி அதிலிருந்த மகளிரிடம் கலந்துரையாடினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்த மக்கள் உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
Tamil Nadu Chief Minister Stalin went door to door in Vellore to collect votes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.