கிருஷ்ணகிரி

இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

விளைநிலத்தில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப் பூர்வ இழப்பீடு வழங்கக் கோரி கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியன  ஈடுபட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டெல்லி பாபு, தமிழ்நாடு விவசாயி சங்க மாநிலக் குழு பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு சட்டப் பூர்வமான இழப்பீடு வழங்க வேண்டும், விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT