கிருஷ்ணகிரி

இளம்வயது திருமண தடுப்பு விழிப்புணர்வு

DIN


இளம்வயது திருமணத்தை தடுக்கும் வகையில், காவேரிப்பட்டணத்தை அடுத்த அகரத்தில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி சைல்டு லைன் சார்பில், அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை வகித்தார். முகாமில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, காவல் உதவி ஆய்வாளர் விஜயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளம்வயது திருமணத்தைத் தடுப்பது, அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமை சைல்டு லைன் உறுப்பினர் அஜந்தா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT