கிருஷ்ணகிரி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  மாவட்டத் தலைவர் வ.நாராயணன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் கருணாநிதி, ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீட் தேர்வு பயிற்சியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். முதுநிலையாசிரியர் காலிப் பணியிடங்களுக்கு இரண்டாம்கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT