கிருஷ்ணகிரி

பென்னாகரத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கண்டன பேரணி

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக பென்னாகரம் வழக்குரைஞர்கள் சங்கத்தினர், பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்  அலுவலகம் வரை கண்டன பேரணி நடத்தினர். 
பேரணிக்கு  வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.சரவணன்  தலைமை வகித்தார்.  ஆர்.ஜானகிராமன் முன்னிலை வகித்தார் . பேரணியில் பங்கேற்ற வழக்குரைஞர் சங்கத்தினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இப்பேரணியில் வழக்குரைஞர் சங்க செயலாளர் பாலசரவணன், பொருளாளர் நரேந்திரன் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT