காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தின விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கே.அசோக்குமார் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடராஜ், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் பி.டி.சுந்தரேசன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வெங்கடரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊர்வலத்தில் பங்கேற்றோர் உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.