கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு 

DIN

காவேரிப்பட்டணத்தில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
 கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் மருத்துவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி பொற்கொடி (34) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி திங்கள்கிழமை இரவு சென்றார். காவேரிப்பட்டணம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த பொற்கொடி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 சமையலர் உயிரிழப்பு... காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சலாவுதீன் (36). பெங்களூரில் சமையல் பணி செய்து வந்தார். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகைக்காக, சொந்தக் கிராமத்துக்கு வந்திருந்த அவர் இரு சக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது.
 இதில், பலத்த காயம் அடைந்த சலாவுதீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
 இந்த விபத்துகள் குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸார், தனித் தனியாக வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT