கிருஷ்ணகிரி

தொழிலாளியைத் தாக்கியதாக 3 பேர் கைது

DIN

ஒசூரில் தொழிலாளியைத் தாக்கியதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.
 ஒசூர் சானசந்திரம் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் (44), மாதப்பா (40), ராஜா (25). இவர்கள் ஜேசிபி வாகன உரிமையாளர்கள். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த வீரண்ணா (35) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் சம்பளம் ரூ.500 கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு முருகன் உள்பட மூவரும் தர மறுத்ததுடன் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
 இது குறித்து வீரண்ணா ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகன், மாதப்பா, ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT