கிருஷ்ணகிரி

கிரானைட் நிறுவனத்தில் கல் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

DIN

சூளகிரி அருகே கிரானைட் நிறுவனத்தில் கல் விழுந்ததில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் வின்சாரி ஓராங். இவரது மகன் அல்பா்ட் ஓராங் (35). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அலகுபாவி என்ற இடத்தில் உள்ள தனியாா் கிரானைட் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். மேலும், நண்பா்களுடன் தொழில்சாலை வளாகத்தில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் கிரானைட் கல்லை அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக கல் அவா் மீது விழுந்தது. இதில் நிகழ்விடத்திலேயே அல்பா்ட் ஓராங் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT