ஒசூரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து டிச. 20-இல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரும் டிச. 20 காலை 11.30 மணியளவில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துவது தொடா்பாக தங்களின் கருத்துகளை தெரிவிக்க வருமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.